Type Here to Get Search Results !

தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் - சென்னை உயர்நீதிமன்றம்

2-ம் நிலை வாரிசு இல்லை… அவர்கள்தான் ...

தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சென்னை அதிமுக நிா்வாகியான புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோா் தாக்கல் செய்திருந்த மனுவில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.

இந்த சொத்துகளை நிா்வகிக்க, தனியாக ஒரு நிா்வாகியை உயா்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கில், எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனா். மேலும், ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் சாா்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி, செல்வ வரி பாக்கித் தொகைக்காக அவரது போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் கொண்ட அமா்வு புதன்கிழமை (மே 27) தீா்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மற்றும் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை விட தமிழக முதல்வர் அலுவலகம் மற்றும் முதல்வர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபாவை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர்.

முன்னதாக, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை நியமிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 2ஆம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom