போபாலைச் சேர்ந்த தொழிலதிபர் தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை கொரோனா அச்சமின்றி டில்லிக்கு அனுப்ப 180 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப்போக்குவரத்து கடந்த 2 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் தற்போது திங்கள் முதல் உள்நாட்டு விமானங்கள் பல்வேறு வழிகாட்டுதல்களின் படி இயக்கப்படுகின்றன. இருப்பினும் விமானங்களில் பயனிப்போருக்கு யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துவிடுகிறது.
இந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மதுபான ஆலை உரிமையாளர் ஒருவர் ஏ320 என்ற 180 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தை தனது மகளுக்காக மட்டும் வாடகைக்கு எடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு சொந்த ஊர் வந்த அவரது மகளால் ஊர் திரும்ப முடியவில்லை. தற்போது விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதால், விமானத்தில் அனுப்ப முடிவு செய்தார். ஆனால் பயணிகள் விமானத்தில் சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக, கூட்டத்தை தவிர்க்க மொத்த விமானத்தையும் வாடகைக்கு எடுத்துள்ளார்.
டில்லியிலிருந்து விமானிகளுடன் மட்டும் போபால் வந்த அவ்விமானம், தொழிலதிபரின் மகள், அவரது இரண்டு பேரப்பிள்ளைகள் மற்றும் உதவியாளர் ஒருவருடன் மீண்டும் டில்லி புறப்பட்டு சென்றது. விமானத்தை வாடகைக்கு எடுத்தவர் பெயரை குறிப்பிட விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சாதரணமாக ஏ320 விமானத்தை ஒரு டிரிப் வாடகைக்கு எடுக்க ரூ.20 லட்சம் ஆகும் என்கின்றனர்.
AthibAn Tv