தமிழகத்தில் இன்று (மே 30) புதிய உச்சமாக ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184 ஆகவும், 160 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 82 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 21,184 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 12,605 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று உயிரிழந்த 6 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,021 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,239 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 18,030 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1915 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
AthibAn Tv