- இன்று 827 மீண்டும் மிக வேகத்தில் எட்டியுள்ளது.
- மொத்த எண்ணிக்கை 19,372 ஆகும்
- சென்னையில் 559, தலைநகரில் மொத்தம் 12,762.
- மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து திரும்பிய 1,253 பேர் இதுவரை நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளனர்.
- இன்று 12 புதிய மரணங்கள்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது : தமிழகத்தில் இன்று மேலும் 827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் , 70 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், 20 பேர் கர்நாடகாவில் இருந்தும் வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 19,372 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 145 ஆக உள்ளது. 639 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 8,824 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 70 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,246 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரை 4,55,216 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 55.54 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
AthibAn Tv