Type Here to Get Search Results !

5.0 பொது முடக்கம் நீட்டிக்குமா.? ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை | 5.0 Coronavirus Lockdown



கொரோனா பரவலை கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக  26 ஆம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக மீண்டும் நாளை முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.  இதில் எந்தெந்த மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிப்பது, எந்தெந்த தளர்வுகளை அதிகரிப்பது என்பது குறித்த பரிந்துரைகளை மருத்துவ குழு   வழங்கும் எனவும், அதை பொருத்து தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடும் எனவும் கூறப்படுகிறது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom