தேசிய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை, சராசரியாக 12 நாட்களில் இரட்டிப்பாகும் நிலையில், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் இந்த இரட்டிப்பு விகிதம் 70 நாட்கள் என்ற குறைந்த நிலையை எட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இதுவரை 31,332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,007 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7,696 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களின் தகவல்களை ஆய்வு செய்து மத்திய சுகாதார அமைச்சகம் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெலுங்கானா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் வளர்ச்சி விகிதம் ஒரு நாளைக்கு 3 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. மாறாக, ஜம்மு-காஷ்மீர், டெல்லி மற்றும் ஒடிசா ஆகியவை தற்போது கவலைக்குரிய நிலையில் உள்ளன.
இந்தியாவில் இதுவரை 31,332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,007 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7,696 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களின் தகவல்களை ஆய்வு செய்து மத்திய சுகாதார அமைச்சகம் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெலுங்கானா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் வளர்ச்சி விகிதம் ஒரு நாளைக்கு 3 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. மாறாக, ஜம்மு-காஷ்மீர், டெல்லி மற்றும் ஒடிசா ஆகியவை தற்போது கவலைக்குரிய நிலையில் உள்ளன.
சத்தீஸ்கர், தெலுங்கானாவை தொடர்ந்து, கர்நாடகா, பஞ்சாப், கேரளாவில் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக 35 நாட்கள் ஆகின்றன. இம்மாநிலங்களில் அதிவேக வளர்ச்சி இல்லை. உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இரட்டிப்பு விகிதம் 25 நாட்களாக உள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் இவ்விகிதம் 20 நாட்களாக உள்ளது. கவலைக்குரிய மாநிலங்களில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மேல்நோக்கிய போக்கிலும், இரட்டிப்பாகும் எண்ணிக்கை தேசிய சராசரியான 12 நாட்களுக்கு குறைவாகவும் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 12 நாட்களிலும், டில்லி, ஒடிஷாவில் 10 நாட்களிலும், ஜார்கண்டில் 6 நாட்களிலும், பீகாரில் 5 நாட்களிலும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகிறது.
தமிழகம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் புதிய பாதிப்பு அதிகமாக உள்ள போதும், கீழ் நோக்கிய போக்கே இருப்பதை வரைபடம் காட்டுகிறது. தமிழகத்தில் கொரோனா இரட்டிப்பு விகிதம் 25 நாட்களாக உள்ளது. மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், திரிபுரா மற்றும் கோவாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது பூஜ்ஜியமாக உள்ளன. சிக்கிம், நாகலாந்து, டாமன் மற்றும் டையு, லட்சத்தீவுகளில் இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை. நோயிலிருந்து மீண்டவர்களின் பங்கு 23.44 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்களில் விளக்கப்பட்டுள்ளது.
AthibAn Tv