Type Here to Get Search Results !

ஜல்சக்தி துறையின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம்: அரசு விளக்கம்

மோடி அரசின் மொள்ளமாரித்தனத்தை ...

ஜல்சக்தி துறையின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் இணைந்திருப்பதால் தமிழக விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தமிழக அரசின் பொதுபணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் துறைகளில் ஒன்றான ஜல்சக்தி துறை , காவரி மேலாண்மை வாரியத்தை தன்னுடன் இணைத்து கொண்டது. தொடர்ந்து மேலும் ஜல்சக்தி துறையின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் செயல்படும் என அறிவித்தது. மத்திய அரசின்அறிவிப்பை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் தெரிவித்தன.

இதனிடையே இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதி்ல் கூறப்பட்டிருப்பதாவது: இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளது.மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது முற்றிலும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையாகும். இதனால் காவரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரிநீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக அரசின் பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom