சென்னையில் மட்டும் இன்றைக்கு (புதன்கிழமை) மேலும் 94 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக நிலவரம் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 94 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும், விழுப்புரத்தில் இருவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
AthibAn Tv