Type Here to Get Search Results !

'கொரோனாவால் கியூபா லாபம் ஈட்டுகிறது': அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு

latest tamil news

மருத்துவ பணிகளில் சிறப்பாக செயல்படும் நாடாக கியூபா அறியப்படுகிறது. அதேவேளையில், பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கியூபாவின் மருத்துவ சிகிச்சைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 'கியூபாவிடம் இருந்து உலகின் எந்த நாடுகளும் மருத்துவ உதவிகளை பெற வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க, பல்வேறு நாடுகளும் கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவிகள் கோரி வருகின்றனர். உதவி கோரிய அனைத்து நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்பி வருகிறது கியூபா. இதுவரை, 22 நாடுகளுக்கு, 1,200 மருத்துவ பணியாளர்கள் அனுப்பியுள்ள கியூபா, கடந்த 26ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு, 200க்கும் மேற்பட்ட மருத்துவர்களை அனுப்பியது. அவர்களை, விமான நிலையத்திற்கே சென்று, தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ராமபோசா வரவேற்றார். மருத்துவத்தில் மிகவும் பின்தங்கியுள்ள தென் ஆப்ரிக்காவுக்கு உதவிய கியூபாவிற்கு, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பாராட்டு தெரிவித்திருந்தன.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ, 'கொரோனா தொற்று பரவல் சூழலில் கியூபா லாபம் ஈட்டி வருகிறது. கியூபாவின் குற்றத்தை பிரேசில், ஈக்வேடார் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் கண்டுகொண்டதால் அந்நாட்டின் தலைவர்களை பாராட்டுகிறேன். கத்தார் மற்றும் தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளும் இதையே செய்ய வேண்டும்' என, தென் ஆப்ரிக்காவை விமர்சித்துள்ளார்.







இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'கியூபாவின் சர்வதேச மருத்துவ ஒத்துழைப்புகள் குறித்து, அமெரிக்கா எப்போது பொய் குற்றச்சாட்டுகளையே கூறிவருகிறது' என, கியூபா அதிபர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom