Type Here to Get Search Results !

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ; சிரியாவில் 7 பேர் பலி

மீண்டும் சிரியாவில் இஸ்ரேல் ...

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 3 பொது மக்கள் உட்பட 7 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

ஈரான் ஆதரவு பெற்ற சில பயங்கரவாத அமைப்புகள் சிரியா நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான் வாழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலை சிரியா அரசு கடுமையாக எச்சரித்தது. பயங்கரவாதிகள் இல்லை எனவும் தங்களின் ராணுவ நிலைளை குறிவைத்து தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது என்றும் கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தங்களது படைகள் மீது தாக்கியதாக இஸ்ரேலின் போர் விமானங்களை சிரியா வான்வழி பாதுகாப்பு படை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்தது.

இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இருதினங்களுக்கு முன் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப் பட்டனர். பொது மக்கள் 3 பேர் பலியாகினர். மேலும் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom