கேரளாவின் வயநாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடினால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 485 பேர் பாதிக்கப்பட்டனர், 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கேரள போலீஸ் சட்டம் 118 இ பிரிவின் கீழ் முகக்கவசம் அணியாமல் நடமாடும் நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படுமென வயநாடு எஸ்.பி இளங்கோ தெரிவித்துள்ளார். ஒருவேளை விதிமீறலில் ஈடுபட்ட நபர் நீதிமன்றத்திற்கு செல்ல விரும்பலாம். அவ்வாறு சென்று சட்டத்தின்படி குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அந்த நபர் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் செலுத்த நேரிடலாம்.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 485 பேர் பாதிக்கப்பட்டனர், 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கேரள போலீஸ் சட்டம் 118 இ பிரிவின் கீழ் முகக்கவசம் அணியாமல் நடமாடும் நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படுமென வயநாடு எஸ்.பி இளங்கோ தெரிவித்துள்ளார். ஒருவேளை விதிமீறலில் ஈடுபட்ட நபர் நீதிமன்றத்திற்கு செல்ல விரும்பலாம். அவ்வாறு சென்று சட்டத்தின்படி குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அந்த நபர் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் செலுத்த நேரிடலாம்.
இதுதவிர, வியாபாரிகள் தங்களது கடைகளில் சானிடைசர் அல்லது சோப் கொடுக்க தவறினாலோ அல்லது கடை ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தாலோ ரூ.ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். வயநாடு தொகுதியின் தற்போதைய எம்.பியாக இருப்பவர் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நிதியை திரட்டுவதற்காக நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க அதிகாரம் அளிக்கும் உத்தரவை பிறப்பிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்த நாளில் இந்த அபராத அறிவிப்பு வெளியாகியுள்ளது.
AthibAn Tv