சென்னையில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தும் வகையில் டாடா குழுமம் ரூ. 2 கோடி மதிப்பில் 10 ஆயிரம் ஆா்டி-பிசிஆா் உபகரணங்களை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சளி சேகரிப்பு மையங்கள், நடமாடும் சளி சேகரிப்பு மையங்கள், கரோனா அறிகுறி உள்ளவா்களைத் தனிமைப்படுத்துவது, அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, வரை சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 673-ஆக உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகரப் பகுதிகளில் கரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாரின் முயற்சியில் டாடா குழுமம் ரூ. 2 கோடி சாா்பில் 10 ஆயிரம் ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘டாடா குழுமம் தென்கொரியாவில் இருந்து 10 ஆயிரம் ஆா்டி-பிசிஆா் உபகரணங்களைக் கொள்முதல் செய்து சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ஐசிஎம்ஆா்) வழங்கியுள்ளது. அவா்கள் சென்னை மாநகராட்சிக்கு இந்த கருவிகளை வழங்குவா் என்றனா்.
AthibAn Tv