Type Here to Get Search Results !

மத்திய பிரதேச சிறையில் 19 பேருக்கு கொரோனா

latest tamil news

மத்திய பிரதேச இந்தூரில் உள்ள மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் சுமார் 29,451 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை 939 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள சிறையில் 19 கைதிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இந்தூர் மாவட்ட தலைமை அலுவலர் பிரவின் ஜாடியா கூறுகையில், நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இந்தூரில் 19 சிறை கைதிகளுக்கு நோய் தொற்று உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அவர்கள் தற்போது வேறு சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom