Type Here to Get Search Results !

மஹாராஷ்டிராவில் 10 ஆயிரம் பேர் பாதிப்பு

latest tamil news

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.

நாட்டிலேயே கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் தற்போது வரை 9,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,388 பேர் குணமடைந்தனர். 400 பேர் உயிரிழந்தனர். 7,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் மும்பையில் மட்டும், 6,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 244 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் உள்ள மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் நேற்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom