Type Here to Get Search Results !

சென்னையில் தொடரும் சோகம்; ஒரே நாளில் 103 பேர் பாதிப்பு

சென்னையில் தொடரும் சோகம்; ஒரே ...

தமிழகத்தில் இன்று (ஏப்.,28) பாதிக்கப்பட்ட 121 பேரில் சென்னையில் மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மொத்தம் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே தினமும் அதிக பாதிப்பாக தொடர்ந்து சென்னையே இருந்து வருகிறது. தற்போது வரை சென்னையில் மொத்தம் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சென்னை உட்பட 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 12 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், நாமக்கலில் 2 பேர், காஞ்சிபுரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயது வாரியாக பாதிப்பு

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ள 2,058 பேரில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 121 பேரும், 13 முதல் 60 வயதுடையவர்கள் 1697 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 240 பேரும் உள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு

latest tamil news



latest tamil news

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom