Type Here to Get Search Results !

கொரோனா பாதிப்பு சூழல் தொடா்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடிCoronavirus(COVID-19)

கொரோனா பாதிப்பு சூழல் தொடா்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளாா். இத்தகவலை, பிரதமரின் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக, சுட்டுரையில் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட பதிவில், ‘கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தயாா்நிலை குறித்து உயரதிகாரிகளுடன் பிரதமா் மோடி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு சூழல் மற்றும் அதனை எதிா்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் அவா் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom