Type Here to Get Search Results !

சொர்க்க வாசல் திறப்பு என்றால் என்ன

திருஅத்யயன (வைகுந்த  ஏகாதசி) திருவிழா என்றும்
திருவாய்மொழி திருவாசல் (சொர்க்கவாசல்) பரமபதவாசல் .என்ற பெயரும் உண்டு .
திருஅத்யயன உற்சவம் உருவான விதம்; அதன் பெருமை திருக்கார்த்திகை தினத்தன்று திருமங்கை மன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை பாடினார். அதைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்த அழகிய மணவாளன், திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என கேட்க,அதற்கு அவர், தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், திரு அத்யயன உற்சவத்தில் வேதங்களைக் கேட்டு மகிழ்வதுபோல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி பாடல்களைக் கேட்டருள வேணும் என்று விண்ணபிக்க அதற்கு பெரிய பெருமாளும் இசைவு தந்தார்.






இவ்வாறு நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த, திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு, நாதமுனிகள் காலத்தில் திருமங்கையாழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப்பாடல்களையும், மற்றைய ஆழ்வார்கள் அருளிச் செய்த பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருள எண்ணி, பகல்பத்து உற்சவம் எனப் பெயரிட்டு அதைக்கொண்டாட ஏற்பாடுகளைச் செய்தார்.

  இவ்வாறு (சொர்க்கவாசல்) பரமபதவாசல் திருநாள் வைபவம், பகல்பத்து உற்சவம் இராப்பத்து உற்சவம் என 21 நாள்கள் நம் பெருமாளுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. இவ்வளவு புகழ்வாய்ந்த இந்த உற்சவம் நமது உடுமலை மாநகரில் ஶ்ரீ நவநீத கிருஷ்ணன் ஸ்வாமி கோவிலில் இவ்வருடம் (ஶ்ரீ விகாரி வருடம்)26.12 முதல் 16.01 வரை நடைபெற வேண்டுமாய் பெருமாள் திருவுள்ளம் பற்றியுள்ளார். இதனை கண்டும் கேட்டும் ஆனந்தப்பட வேண்டுமாய் பக்த மஹா ஜனங்கள் அனைவரையும் அன்புடன் பிரார்த்திக்கின்றோம்.
எதற்காக சொர்க்க வாசல் திறப்பு:
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, அவருடைய இருகாதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்கமுடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணு பகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது கைடபருடன் போர்செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

பகவானே தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருணைகாட்ட வேண்டும். என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் அசுர சகோதரர்கள் பெற்றனர். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று அசுரர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம் கேட்டுக் கொண்டனர்.

வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்குவாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும் போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்துசெய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம்


  இவ்வுத்ஸவத்தின் 22 நாள்களும் உபயதாரர்களை கொண்டு நடைபெற இருப்பதனால் ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதனை ஏற்று நடத்தி,செங்கண்  திருமுகத்து செல்வ திருமாலால் எங்கும் திருவருள்
  பெற்றுய்ந்திட  வேண்டுமாய் பக்த மஹா ஜனங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.
திருஅத்யயன உத்ஸவ. விபரம் மற்றும் நிகழ்ச்சி நிரல் விபரம்
    ஶ்ரீ விகாரி வருடம் பகல்பத்து உற்சவம் மார்கழி மாதம் 10 – ந் தேதி வியாழக்கிழமை26.12. இரவு 7:00  மணிக்குமேல் 8:00 மணிக்குள் கர்பக்ரஹத்தில் திருநெடுத்தாண்டகம்: ” மின்னுருவாய்”  பாசுரம் துவக்கம். தளிகை அம்சை.திருவாராதனம் தீர்த்த கோஷ்டி.
விரத மகிமை:

* ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடவேண்டும்

* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

* ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பட்டினியாக இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம் .

* முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம் .

* துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

* நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.

விரதம் இருப்பவர்கள் அனைத்து உடல் நலத்துடனும், ஆரோக்கியத்துடனும், சகல பாக்கியங்களும் பெறுவார்கள்.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom